பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல்! வீடியோ வெளியானது!

07 March 2020 அரசியல்
indiaattackpok.jpg

பாகிஸ்தானிற்கும், இந்தியாவிற்கும் இடையில் தற்பொழுது சுமூக உறவு நிலை இல்லை. இரண்டு நாடுகளும், சண்டையிட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. கடந்த ஆண்டின் மத்தியில், போர் மூளும் அபாயமும் ஏற்பட்டது.

இந்நிலையில், பல ஆண்டுகளாக பாகிஸ்தான் இராணுவமும், இராணுவ ஆதரவு பெற்ற தீவிரவாதிகளும், இந்திய எல்லைப் பகுதியில் இருந்து கொண்டு, இந்திய இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்திக் கொண்டே இருந்து வந்தனர். சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்ற செயலுக்குப் பிறகு, அவர்களின் தாக்குதலானது வெகுவாகக் குறைந்தது.

இதனிடையே, மீண்டும் அவர்களுடைய அராஜகம் தலை தூக்கியது. இதனையடுத்து, யாரும் எதிர்பாராத வகையில் இந்திய இராணுவம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் எல்லைப் பகுதியான குப்வாராவில், பாகிஸ்தான் இராணுவத்திற்குச் சொந்தமான இராணுவ டாங்கிகளும், கனரகத் துப்பாக்கிகளும் உள்ளன.

அதன் மீது, இந்திய இராணுவத்தினர் அதிரடித் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து வீசப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், பாகிஸ்தான் இராணுவத்தின் டாங்கிகள் வெடித்துச் சிதறின. இது குறித்த வீடியோ ஒன்று தற்பொழுது வெளியாகி உள்ளது.

HOT NEWS