சீனாவில் உள்ள இந்தியர்களை மீட்டு வர, இரண்டு தனி விமானங்களை அனுப்ப இந்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இன்று காலையில், செய்தியாளர்களைச் சந்தித்த வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், ஹெபய் விமான நிலையத்தில் இருந்து, இந்தியர்களை மீட்டுக் கொண்டு வர, இரண்டு தனி விமானங்களை இயக்க, சீனாவிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
முறையான அனுமதி கிடைத்ததும், விரைவில் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வரப்படும் எனக் கூறினார். பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், தொடர்ந்து சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இதனை அங்கு வாழும் இந்தியர்கள் கூறியுள்ளனர் எனவும் தெரிவித்து உள்ளார்.