மீண்டும் பதற்றம்! இந்தியா-சீனா இரு நாடுகளும் படைகள் குவிப்பு!

19 May 2020 அரசியல்
indianarmy.jpg

கடந்த வாரம், இந்தியாவின் லடாக் பகுதியில் இந்திய மற்றும் சீன இராணுவ வீரர்களுக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்ட நிலையில், இரு நாட்டு இராணுவமும், தங்களுடையப் படையினை அப்பகுதியில் குவித்து வருகின்றனர்.

இராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்திய வீரர்களும், சீன வீரர்களும் தங்களுடைய சண்டையினை நிறுத்திக் கொண்டனர். இருப்பினும், அப்பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது.

இந்நிலையில், பதற்றத்தினைக் குறைக்கும் பொருட்டு, இரு நாட்டு இராணுவமும் தங்கள் படைகளை கொஞ்சம் கொஞ்சமாகக் குவித்து வருகின்றன. லடாக்கின் டெம்சோக், ச்சுமர், தாலத் பெக் ஓல்டி பகுதிகளில் இந்திய இராணுவம் தன்னுடைய பலத்தினை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

அதே போல், கால்வான் என்ற பள்ளத்தாக்குப் பகுதிகளில், சீன இராணுவம் கூடாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், லடாக் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகின்றது.

HOT NEWS