மருத்துவமனைகள் மீது மலர் தூவல்! போர் விமான மரியாதை!

04 May 2020 அரசியல்
indiacovidfighters.jpg

இந்தியாவில் கொரோனா வைரஸினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகின்றது. வருகின்றே மே-17ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், நேற்று காலை முதல் மாலை வரை, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், ஏற்கனவே அறிவித்தபடி, இந்தியாவின் விமானப்படை, கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்கள் மூலம், கொரோனா வைரஸிற்கு மருத்துவம் செய்யும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அவர்கள் வேலை செய்யும் மருத்துவமனைகள் மீது, மலர் தூவி, மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை ராஜாஜி மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை உள்ளிட்டவைகளுக்கு காலையில் இந்த மரியாதை செய்யப்பட்டது. பின்னர், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள கொரோனா வைரஸ் சிகிச்சை மருத்துவமனைகளுக்கு, இந்த மரியாதை அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, இந்திய விமானப்படை விமானங்கள், பறந்து சென்றன. பின்னர், இந்தியக் கடற்படையின் கப்பல்கள், நேற்று வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு, மரியாதை செய்யப்பட்டன.

HOT NEWS