நேற்று, இந்திய இராணுவ தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில், இந்திய இராணுவ வீரர்கள் அணிவகுப்பு நடத்தினர். அதனை, மேஜர் ஜென்ரல் பிபின் ராவத் பார்வையிட்டார்.
இது குறித்து, டிவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்திய இராணுவம், வீரத்திற்கும் துணிவிற்கும் பெயர் பெற்றது. அப்படிப்பட்ட நம்முடைய இராணுவம் எப்பொழுதும், எல்லாவற்றிற்கும் தயாராகவே உள்ளது. நாட்டு மக்களின் தேவைக்கு ஏற்றவாறு, தன்னை எப்பொழுதும் தயாராக வைத்திருந்து சேவை செய்யும் திறன் படைத்தது என பெருமிதமாக பதிவிட்டுள்ளார்.
நேற்று, டெல்லியில் உள்ள கரியப்பா பரேட் மைதானத்தில், இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. பின்னர், கொண்டாட்டங்களும் நடைபெற்றது. இதனால், அப்பகுதியே வண்ணமயமாக காட்சியளித்தது.