இந்தியா வீரர்கள் அத்துமீறி தாக்கியதால், இரண்டு வீரர்கள் உட்பட மூன்று பேர் இறந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில், இந்திய இராணுவம் சுட்டது.
அதற்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில், பாகிஸ்தான் இராணுவம் பீரங்கி மூலம் சுட்டுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்திய இராணுவம் பீரங்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் சுட்டதில் பாகிஸ்தான் பின் வாங்கியுள்ளது. இதனை இந்தியா இராணுவத் தளபதி பிபின் இராவத் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில், 10 வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் கூறியுள்ளார்.
லஸ்கர் ஈ தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதின் இயக்கத்தினைச் சேர்ந்த, பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் செயல்பட்டு வரும், 3 முதல் 6 தீவிரவாதக் குழுக்களையும் அழித்ததாக அவர் அறிவித்தார். இந்த அதிரடி, திடீர் தாக்குதலால், பாகிஸ்தான் மற்றும் இந்தியா எல்லையில், போர் பதற்றம் நிலவி வருகின்றது.