இந்தியா பெண் சுட்டுக் கொலை! நேபாள எல்லையில் பதற்றம் அதிகரிப்பு!

12 June 2020 அரசியல்
encountergun.jpg

இந்தியாவுடன் தற்பொழுது மோதல் போக்கினை, நேபாள அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற நிலையில், தற்பொழுது இந்தியப் பெண் நேபாள போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

பீகாருக்கு அருகில் உள்ள நேபாள எல்லையில், கடந்த சில நாட்களாக பொதுமக்கள் போராட்டதில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தற்பொழுது நேபாளத்தின் ஏபிஎப் அமைப்புடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். சர்வதேச எல்லைப் பகுதியான அங்கு, இவ்வாறு பிரச்சனை ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேபாளப் போலீசார் அங்குப் பெருமளவு குவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த பிரச்சனை மேலும் பெரிதாகாமல் இருக்கவும், போராட்டக்காரர்களைக் கலைக்கவும் நேபாள போலீசார் துப்பாக்கிச் சூட்டினை நடத்தி உள்ளனர். இதில், இந்தியாவின் பீகார் மாநிலத்தினைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், சிதாமர்ஹி என்ற இடத்தில் நடைபெற்று உள்ளது. இதில், 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

HOT NEWS