பாகிஸ்தானில் மீண்டும் தீவிரவாதிகள் செயல்பட தொடங்கிவிட்டனர்! இந்திய தளபதி பிபின் ராவத் பேட்டி!

23 September 2019 அரசியல்
bipinrawat.jpg

credit:twitter.com/Prasar bharati news services

பாகிஸ்தானில் சற்று காலம் அமைதியாக இருந்து வந்த தீவிரவாத இயக்கங்கள் தற்பொழுது, மீண்டும் செயல்படத் தொடங்கிவிட்டதாக, இந்திய தளபதி திரு.பிபின் ராவத் பேட்டியளித்துள்ளார். செய்தியாளர்களை இன்று சந்தித்த ராவத், பேசும் பொழுது இதனைத் தெரிவித்தார்.

பால்கோட்டில் நமது விமானப்படை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஒரு அதிரடி வான்வழித் தாக்குதலை நடத்தியது. அதில், ஜெய்ஸ்-ஈ-முகம்மது அமைப்பினைச் சேர்ந்த, தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். சில மாதங்களாக அமைதியாக இருந்து வந்த தீவிரவாதிகள் குழு, தற்பொழுது மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.

தேவைப்பட்டால், பால்கோட்டைத் தாண்டியும் சென்று, இந்திய வான்வெளி விமானப்படை தாக்குதல் நடத்தவும் தயார் நிலையில் உள்ளது. மேலும், இந்திய இராணுவம் நம்முடைய எல்லையில், மிகத் தீவிரமாக ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளது. அதேசமயம், நம்முடையப் படைத் தயாராக உள்ளது.

இந்தியா முழுவதும் எப்பொழுதும் பாதுகாப்புடன் இருப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும், எடுக்கப்பட்டு வருகின்றன. தற்பொழுது வரை அனைத்தும் சரியாகவே செல்கின்றது எனவும் கூறினார்.

HOT NEWS