மயிரிழையில் உயிர் தப்பிய இந்திய கடற்படைத் தளபதி!

05 December 2019 அரசியல்
gun.jpg

ஹாவாயில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், அதிர்ஷ்டவசமாக இந்தியக் கடற்படைத் தளபதி ஆர்கேஎஸ் பதாரியா உயிர் தப்பியுள்ளார்.

அமெரிக்காவின், ஹாவாய் நகரில் அமைந்துள்ள கப்பல் கட்டும் தளத்தில், நேற்று புகுந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். கடற்படை வீரரைப் போல உடை அணிந்திருந்த அவர், கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். இதனால், அங்கிருந்த இரண்டு பேர் பலத்த காயம் அடைந்தனர். மூன்று பேர் இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டாலும், இரண்டு பேர் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டினைத் தொடர்ந்து, அந்த மர்ம நபர் தன்னைத் தானே தலையில் சுட்டுக் கொண்டுள்ளார். இதனையடுத்து, அவசர அவசரமாக அந்தக் கப்பல் கட்டும் தளம் மூடப்பட்டுள்ளது.

இதுபற்றி, அறிக்கை வெளியிட்டுள்ள இந்தியக் கடற்படை, இந்தியக் கடற்படைத் தளபதி ஆர்கேஎஸ் பதாரியாவும், அவருடைய வீரர்களும் ஹவாய் கப்பல் கட்டும் தளத்தில் இருந்தனர். இருப்பினும், துப்பாக்கிச்சூட்டின் காரணமாக, யாருக்கும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை என அறிவித்துள்ளது.

HOT NEWS