pic credit:twitter.com/@ians
ஜம்மூ காஷ்மீர் பகுதியில் உள்ள, பூஞ்ன்ச் மாவட்டத்தில், எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியப் பாதுகாப்புப் படை வீரர்களை, பாகிஸ்தான் இராணுவத்தினர் சுட்டதினால், இந்திய பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தனர்.
காஷ்மீர் பிரச்சனை ஆரம்பித்ததில் இருந்து, பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு இந்தியத் தரப்பில், பதிலடியும் உடனுக்குடனேயே வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஞாயிற்று கிழமை மதியம் ஒரு மணி அளவில், பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுள்ளனர். இதில், ராஜஸ்தானைச் சேர்ந்த ஜாட்த் என்பவர் உயிரிழந்துள்ளார்.
2017ம் ஆண்டு இந்திய இராணுவத்தில் இணைந்த அவர், இந்திய எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார். திடீரென்று பாகிஸ்தான் இராணுவத்தினர் சுட்டதில், எதிர்பாராத விதமாக அவர் உயிரிழந்துள்ளார்.