நித்தியானந்தாவிற்கு எதிராக களமிறங்கிய இண்டர்போல்! கற்பழிப்பு, கடத்தல் வழக்கில் நோட்டீஸ்!

23 January 2020 அரசியல்
nithyanandabluenotice.jpg

கொஞ்சமாவது ரெஸ்ட் விடுறானங்களா என கேட்கும் அளவிற்கு, நித்தியானந்தாவினை போலீசார் மிகத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இருப்பினும், சில்லு வண்டு சிக்கும், சிறுத்த சிக்காது என நித்தியானந்தா கூலாக தன்னுடைய பிரசங்க வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார்.

இந்தியாவில் இருக்கின்றாரா அல்லது அவருடைய கைலாசாவில் இருக்கின்றாரா என, யாருக்கும் தெரியவில்லை. அப்படிப்பட்ட சூழலில், உலக நாடுகளுக்கு இந்தியாவின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதில், நித்தியானந்தா எங்கு இருக்கின்றார் எனத் தெரிந்தால் கூறுங்கள் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அவரைப் பற்றிய ஒருத் தகவலும் இதுவரைக் கிடைக்கவில்லை.

இதனிடையே, தற்பொழுது இந்த பிரச்சனையை இண்டர்போல் மிகத் தீவிரமாக விசாரித்து வருகின்றது. இந்தப் பிரச்சனையின் காரணமாக, உலக நாடுகள் அனைத்திற்கும், நீல நிற அறிக்கையை அனுப்பியுள்ளது இண்டர்போல். அதன் படி, நித்தியானந்தா மற்றும் அவர் சம்பந்தப்பட்டவர்களைப் பற்றித் தெரிந்தால், உடனடியாகத் தகவல் அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பெண் குழந்தைகளை கடத்திச் சென்றுள்ளது மற்றும் கற்பழிப்புத் தொடர்பான புகார்களை, இண்டர்போல் கூறியுள்ளது. இதனால், அவர் மீதான தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டு உள்ளது. ஆனால், அதற்கும் நித்தி கவலைப்படுவதைப் போல் தெரியவில்லை. நான் மதுரை ஆதினத்திற்கு உரியவன் என, ஜாலியாக வீடியோ வெளியிட்டு வருகின்றார் நித்தியானந்தா.

HOT NEWS