அமெரிக்காவின் உளவு ட்ரோன் விமானத்தை, ஈரான் நாட்டின் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி உள்ளனர். இதனை அந்நாட்டின் ஐஆர்ஜிசி வலைதளம் தெரிவித்துள்ளது.
ஹர்மோஸ்கான் என்ற பகுதியில், ஈரான் பாதுகாப்புப் படை, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தபொழுது, அந்தப் பகுதியில் பறந்து கொண்டு இருந்த, அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான, உளவு ட்ரோன் விமானத்தை கண்டுள்ளனர். இதனை அடுத்து, அதனை நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் RQ-4 Global Hawk என்ற பிரிவினை சார்ந்தது என, அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுப் பற்றி பதில் கூறியுள்ள அமெரிக்க தளபதி பில் அர்பன், சுட்டு வீழ்த்தப்பட்டது அமெரிக்க ட்ரோன் அல்ல, எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து இரு நாடுகளக்கும் இடையே, கடந்த ஆண்டு முதல், அணுசக்தி மேலாண்மைப் பிரச்சனை நிலவி வரும் நிலையில், இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.