2000 நிர்வாணப் படங்கள் எடுத்த ஐடி ஊழியர் அதிரடி கைது!

28 August 2019 அரசியல்
nomeansno.jpg

ஐதராபாத் நகரில் தற்பொழுது பரபரப்பான பிரச்சனை ஒன்று எழுந்துள்ளது. அங்கு வேலை செய்யும் ஐடி பெண் ஊழியர், ஒருவர் அங்குள்ளக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் அவர் திருமணமானவர் என்றும், அவரை பிரதீப் என்பவர் நிர்வாணமாகப் புகைப்படம் எடுத்து, அதனைக் காட்டி என்னை மிரட்டுகிறார் என்றும், இணையத்தில் விட்டுவிடுவதாக மிரட்டுகிறார் என்றும் புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கிளமெண்ட் ராஜ் செழியன் எனும் பிரதீப்பை போலீசார் கைது செய்து விசாரித்ததில் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 500க்கும் மேற்பட்டப் பெண்களை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்துள்ளார் பிரதீப். இதுவரை 2000 வீடியோக்கள் வரை எடுத்துள்ளதாக போலீசார் கண்டுபிடித்து அதிர்ந்துள்ளனர்.

இவரைப் பற்றி விசாரிக்கையில், இவர் ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர் என்றும், பலருக்கும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அப்பெண்களை ஏமாற்றி வந்துள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

HOT NEWS