இத்தாலியில் தான், தற்பொழுது உலகிலேயே அதிகமானோர் கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
அங்கு பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையானது, ஒரு லட்சமாக இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், அங்கு 8000 பேர் தற்பொழுது வரை இறந்துள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பால் இறப்பவர்களின் உடலினை சாதாரண உடலைப் போல புதைக்கலாமா என்ற கேள்வி நிலவி வருகின்றது.
இத்தாலியில், நாளுக்கு நாள் இந்த வைரஸ் தொற்றின் கொடூரமானது அதிகரித்து வருகின்றது. அங்குள்ள மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகளில் நோயாளிகள் குவிந்து வருகின்றனர். இதனிடையே, பேஸ்புக்கில் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அதில், இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலை எவ்வாறு புதைக்கின்றனர் எனக் காட்டியுள்ளனர்.
அந்த வீடியோவில், குவியல் குவியலாக பிணங்கள் ஒரு பெரியக் குழிக்குள் கொட்டப்படுகின்றன. இது தற்பொழுது அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவினை ஆராய்ந்த பேஸ்புக்கானது, இது உண்மையல்ல என விளக்கமளித்துள்ளது.
https://www.facebook.com/706857830/videos/10157403988157831/