1200கிமீ சைக்கிள் பயணம் செய்த பெண்ணை பாராட்டிய டிரம்ப் மகள்!

23 May 2020 அரசியல்
ivankatrump.jpg

1200 கிலோமீட்டர் தன்னுடையத் தந்தையை சைக்கிளிலேயே அமர வைத்து, வீடு திரும்பிய பெண் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளார்.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு நடைபயணமாகவே சென்றடைந்து வருகின்றனர். இந்நிலையில் 15 வயதுடைய ஜோதி என்றப் பெண், தன்னுடைய காயமடைந்த தந்தையை சைக்கிளில் அமர வைத்து, 1200 கிலோமீட்டர் பயணம் செய்துள்ளார்.

தொடர்ந்து ஆறு நாட்கள் இரவு பகலாகப் பயணம் செய்து, தன்னுடைய சொந்த ஊரினை அடைந்தனர். இது பெருமளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்த சூழ்நிலையில், இதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகள் பாராட்டி உள்ளார். இது குறித்து அவர் செய்துள்ள ட்வீட்டில், அழகான அன்பிற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என கூறியுள்ளார்.

HOT NEWS