பெற்றோர் கல்லறை அருகே அன்பழகன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது!

10 June 2020 அரசியல்
janbhalagandied.jpg

இன்று காலையில் மறைந்த திமுக எம்எல்ஏ அன்பழகனின் உடல், நல்லடக்கம் செய்யப்பட்டது.

கடந்த வாரம் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், திமுக எம்எல்ஏ அன்பழகன் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில், அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானது. இதனைத் தொடர்ந்து, பலரும் கவலைத் தெரிவித்து வந்தனர். இந்த சூழ்நிலையில், அவர் இன்று காலையில் 8.05 மணியளவில் இயற்கை எய்தினார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் என்பதால், அவருக்கு இறுதி அஞ்சலி செய்ய பெரிய அளவில் யாரையும் அனுமதிக்கவில்லை.

இதனால், அவருடைய புகைப்படங்களுக்குப் பலரும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். அன்பழகனுக்காக திமுக தலைவர் முகஸ்டாலின் வீடியோ பதிவு ஒன்றினையும் வெளியிட்டு உள்ளார். இந்த சூழ்நிலையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து, அவருடைய பூத உடலை அடக்கம் செய்ய எடுத்துச் சென்றனர்.

அவர் அடக்கம் செய்யப்பட வேண்டிய இடத்தில், சுகாதாரத்துறை ஊழியர்கள் முன்னரே சென்று, கிருமிநாசினியைத் தெளித்தனர். பின்னர், அங்கு அவருடைய உடல் கொண்டு செல்லப்பட்டது. கண்ணம்மாபேட்டையில் உள்ள சமாதியில், அவருடைய உடலானது, அவருடைய தாயாரின் சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. இவருடைய மறைவிற்கு, தமிழகத்தின் முதல்வர் உட்படப் பலரும், தங்களுடைய இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

HOT NEWS