உலக அழகி பட்டத்தினை வென்ற ஜமைக்கா பெண்!

16 December 2019 அரசியல்
missworld2019.jpg

ஜமைக்கா நாட்டினை சேர்ந்த 23 வயதுடைய டோனி-ஆன் சிங் என்ற பெண்மணி, உலக அழகி பட்டம் வென்றார்.

இந்தப் போட்டியில் பங்குபெறுவதற்காக சுமார் 120 நாடுகளைச் சேர்ந்த, போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில், இந்தியாவினை சேர்ந்தவர்களும் பங்குபெற்றனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட போட்டியில், முதல் சுற்றுக்காக 40 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தினை சேர்ந்த சுமன் ரத்தன் சிங் ராவ் என்ற 21 வயது பெண்மணியும் இறுதி சுற்றுக்குத் தேர்வாகினர்.

மொத்தம் 10 பேர் இறுதி சுற்றுக்குத் தேர்வாகினர். அதில், மொராண்ட் விரிகுடாவில் பிறந்து, அமெரிக்காவில் உள்ள டேலஸில் குடியேறியவர். இவர், அனைத்துப் போட்டியாளர்களையும் வெற்றிப் பெற்று, உலக அழகிப் பட்டத்தினைப் பெற்றார். இரண்டாவது இடத்தினை பிரான்ஸ் நாட்டின் ஓபெலி மெஸினோ பிடித்தார். மூன்றாவது இடத்தினை இந்திய அழகிய சுமன் ரத்தன் சிங் ராவ் பெற்றார்.

HOT NEWS