ஆர்டிகல் 370 மற்றும் 35ஏ ஆகிய பிரிவுகள் நீக்கப்படுவதற்கு முன், இராணுவக் கட்டுப்பாடு ஜம்மூ காஷ்மீரில் விதிக்கப்பட்டது. இந்நிலையில், அங்கு பாதுகாப்புப் படையினர் உட்பட பலரும், தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இதனை முன்னிட்டு, அங்கு பலவிதமானக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இண்டர்நெட் சேவைகள், காஷ்மீரின் ஒரு சில பகுதிகளில் அனுமதிக்கப்பட்டு விட்டதாகவும், லேண்ட்லைன் சேவை அனைத்து இடங்களிலும் வேலை செய்ய ஆரம்பித்து விட்டதாகவும், அம்மாநில தகவல்தொடர்புத் துறை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஜம்மூ-காஷ்மீர் பகுதியில், அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு விட்டதாகவும், மக்கள் தங்களுடைய இயல்பான வாழ்க்கையை வாழ, ஆரம்பித்து விட்டதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.