பாஜகாவின் மூத்த தலைவர் திரு. எல்.கே அத்வானி முதல் பலரும் சம்பந்தபட்ட, பாபர் மசூதி வழக்கினை விசாரிக்கும், சிபிஐ அமைப்பின் சிறப்பு நீதிபதி பாதுகாப்பு கேட்டுள்ளார்.
இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், பல நீதிபதிகள் மாறிவிட்டனர். இந்நிலையில், இந்த வழக்கினைத் தற்பொழுது விசாரிக்கும் நீதிபதி திரு.எஸ்.கே யாதவ் தனக்குப் பாதுகாப்பு வேண்டும் என உச்சநீதிமன்றத்திடம் பாதுகாப்பு வேண்டி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், இவருக்குப் பாதுகாப்பு அளிப்பது குறித்து, உத்திரப் பிரதேச அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மிகவும் முக்கியமான வழக்கு என்பதால், காலம் தாழ்த்தக் கூடாது எனவும் கூறியுள்ளது.