நேற்று ஒரே இரவில், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் நடைபெற்று வரும், கலவரம் தொடர்பாக விசாரணை செய்ய உள்ளதாக, உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் கூறினார். இதனையடுத்து, அவரை ஒரே இரவில், டெல்லியில் இருந்து, பஞ்சாப் மற்றும் ஹரியான மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்றி, குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார்.
மூன்று பாஜக பேச்சாளர்கள் மீது, போலீஸ் ஏன் வழக்குத் தொடரவில்லை என, முரளிதர் கேள்வி எழுப்பி இருந்தார். இதனிடையே, இவரை பணியிட மாற்றம் செய்து, குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான, ராகுல் காந்தி தன்னுடைய டிவிட்டர் கணக்கில் தகவல் வெளியிட்டுள்ளார். அதில், நீதிபதி லோயாவை ஞாபகப்படுத்துங்கள். அவர் பணியிடமாற்றம் செய்யப்படவில்லை எனக் கூறியுள்ளார்.
இவரைத் தொடர்ந்து பலரும், தங்களுடைய கருத்துக்களை இந்த பணியிட மாற்றத்திற்கு எதிராக வெளியிட்டு வருகின்றனர்.