காதல் மன்னன் காசி சிக்கியது எப்படி? 100க்கணக்கான காதல்!

28 April 2020 அரசியல்
kasiarrested.jpg

100க்கும் மேற்பட்ட பெண்களை, தன்னுடைய காதல் வலையில் விழ வைத்து அவர்களை ஆபாசமாகப் புகைப்படம், வீடியோக்களை எடுத்த காதல் மன்னன் காசி கைது செய்யப்பட்டு உள்ளார்.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் தன்னுடைய காதல் வலையினை விரித்தவர் காசி. நாகர்கோயில் மாவட்டம், கணேசபுரம் மெயின் ரோடு பகுதியில் வசித்தவர் காசி என்ற சுஜி. இவருடைய தந்தையின் பெயர் தங்கபாண்டியன். காசி, சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கக் கூடிய நபராவார்.

இவர் சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவைகளில் தனியாகக் கணக்கு வைத்திருக்கின்றார். அத்துடன் போலிக் கணக்குகளும் வைத்துள்ளார். அவர், தன்னுடைய அழகானப் புகைப்படங்களையும், ஜிம் வீடியோக்களையும் வெளியிட்டுக் கொண்டே வந்தார். அந்த புகைப்படங்களைப் பார்த்த பெண்கள் பலரும், அவருடன் நட்புடன் பழக ஆரம்பித்தனர்.

நாளடைவில், அவர் போன் நம்பர் வாங்கி, வாட்ஸ் ஆப்பில் பேசிப் பழகியுள்ளார். பின்னர், பெண்களின் அந்தரங்கப் புகைப்படங்களை கேட்டும் உள்ளார். அதனை அவர்களும் நம்பிக்கையானவர் என்பதால், அனுப்பி வைத்துள்ளனர். அவைகளை, தன்னுடைய செல்போனில் சேவ் பண்ணி வைத்து விடுவாராம். தன்னுடன் பழகும் பெண்களிடம் மிகவும் அக்கறையாகவும், பாசமாகவும் இருப்பது போல இவர் பழகி இருக்கின்றார்.

இவருடைய அன்பால் அனைத்துப் பெண்களும், இவரிடம் தன்னை இழந்துள்ளனர். தனியாக இவருடன் இருக்கும் பொழுது, இவர் விளையாட்டுக்காக எனக் கூறிக் கொண்டு, வீடியோக்களை எடுத்துள்ளார். பின்னர், ஒரு நாள் எனக்கு உடல்நலமில்லை என ஆரம்பித்து கேன்சர் என்றுக் கூறி பல லட்ச ரூபாயினை, பலப் பெண்களிடம் ஏமாற்றி உள்ளார்.

இவ்வாறு செல்கின்ற சமயத்தில், ஒருநாள் கல்லூரி பெண்ணிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். இதனை உணர்ந்த அந்தப் பெண், நேராக காவல்நிலையத்தில் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளார். அவ்வாறு புகார் கொடுக்க முடிவு செய்துள்ள அந்தப் பெண்ணிற்கு அதிர்ச்சிக் காத்திருந்தது. ஏற்கனவே, காசியின் மீது எட்டு புகார்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. இவருடையப் புகாரையும் பெற்ற போலீசார் மொத்தம் ஒன்பது புகாராக அவர் மீது பதிவு செய்தனர்.

இவர் மருத்துவர் ஒருவரை ஏமாற்றும் பொழுது, கையும் களவுமாக மாட்டிக் கொண்டு விட்டார். அவரை அந்த பெண் மருத்துவர் போலீசில் கூற, இவர் மாட்டிக் கொண்டார். போலீஸ் நிலையம் சென்றாலும், அவர் அடங்கவே இல்லை. அங்கும் தன்னுடைய நாடகத்தினை அறங்கேற்றம் செய்துள்ளார். அங்கு தனக்கு, நெஞ்சு வலிக்கின்றது எனவும், வெளியில் விட்டுவிடுங்கள் எனவும் நடித்துள்ளார்.

போலீசார் அவர் செய்வதை எல்லாம் கண்டு ரசித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, அவர் மாட்டிக் கொண்டதை உணர்ந்து அடங்கிவிட்டார். அவருடைய செல்போன் கிடைத்த நிலையில், அவருடைய லேப்டாப் கிடைக்காமலேயே இருந்து வந்தது. அவருடைய குடும்பத்தினர் நடத்தி வந்தக் கோழிப்பண்ணையில், அந்த லேப்டாப் இருந்தது தெரிய வந்தது. அதனைக் கைப்பற்றிய போலீசார் அதனை திறக்க முயற்சித்தனர்.

ஆனால், மூன்றடுக்கு பாஸ்வேர்ட் போட்டு அதனை பாதுகாத்து வந்துள்ளார். அதனை திறந்து பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. ஆம், அந்த லேப்டாப்பில், பல பெண்களின் புகைப்படங்கள், ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளன. இதனை கைப்பற்றிய போலீசார், காசியுடன் பழகிய நபர்களிடம் விசாரிக்க ஆரம்பித்து உள்ளனர்.

HOT NEWS