புகைப்படப் புகார் எல்லாம் செல்லாது! கசிந்த காசியின் ஆடியோ!

11 May 2020 அரசியல்
kassi.jpg

தற்பொழுது பெண்களை ஏமாற்றியப் புகாரால், சிறையில் உள்ளார் காதல் மன்னன் காசி. அவர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

நாகர்கோவில் பகுதியில் வசித்து வந்த 26 வயதான காசி, தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்கள் மூலம், பெண்களுடன் பேச ஆரம்பித்து பின்னர் நெருக்கமாகப் பழகி, அவர்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளார். பெண்களுடன் தனிமையில் இருந்துள்ள காசி, அவர்களுடன் இணைந்து எடுத்த அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை காட்டி மிரட்டி, பணம் பறித்து வந்தார்.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தப் பெண்கள், இவர் மீது நாகர்கோவில் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், தற்பொழுது புதிதாக மற்றொரு பெண் புகார் அளித்ததால், அவர் மீது போக்சோ சட்டமும் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே, அவர் அந்தப் பெண்களிடம் கைதாவதற்கு முன்பு பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

அதில், தன்னிடம் ஏகப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் உள்ளன எனவும், அதனால் என்னை உங்களால் ஒன்றும் செய்ய இயலாது எனவும் கூறுகின்றார். பின்னர், புகைப்படங்களை வைத்து, என் மீது புகார் கூறினால், அதனை போலீசார் ஏற்கக் கூடமாட்டார்கள் என்று மிகவும் சாதாரணமாக பேசுகின்றார். இது தற்பொழுது, வைரலாகி வருகின்றது.

HOT NEWS