என்னிடம் இருந்து எதையும் எடுக்க வில்லை! இங்கு தான் இருக்கின்றேன்! பகவான் சொல்றார் கேளுங்கோ!

23 October 2019 அரசியல்
kalkibhagavan1.jpg

நான் தப்பித்து ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை, என்னிடம் இருந்து எதையும் வருமான வரித்துறை எடுக்கவும் இல்லை என, தற்பொழுது கல்கி பகவான் வீடியோ வெளியிட்டுள்ளார்.

கடந்த 5 நாட்களுக்கும் மேலாக, சுமார் 40 இடங்களில் 300க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை 800 கோடி ரூபாய் மதிப்புடைய பணம், பத்திரங்கள் ஒப்பந்த பத்திரங்கள் மற்றும் முதலீடு பத்திரங்கள் ஆகியவைகளை கைப்பற்றி உள்ளனர்.

மேலும், 90 கிலோ தங்க நகைகள், 5 கோடி மதிப்புள்ள வைர நகைகள் கண்டுபிடிக்கபட்டுள்ளன. மேலும், 4000 ஏக்கரும் மேல் அவர் நிலங்களை வைத்திருக்கின்றார். பல நாடுகளில் சொந்தமாக தீவுகளும் உள்ளன.

அதே போல், அவருடைய மகன் மற்றும் மருமகள் பெயரிலும் பல சொத்துக்கள் இருப்பதால், அவர்களையும் தற்பொழுது வருமான வரித்துறையினர் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

மொத்தமுள்ள 19 வங்கிக் கணக்குகளையும், முதலில் இருந்து தோண்டி எடுத்து, ஆராய்ந்து வருகின்றனர். இந்நிலையில், இன்று வீடியோ வெளியிட்டுள்ள கல்கி பகவான் மற்றும் அம்மா பகவான் நாங்கள் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை என்றுக் கூறியுள்ளனர்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அனைவருக்கும் என்னுடைய ஆசிர்வாதங்கள். நான் இந்த நாட்டிற்கு எதிராக செயல்படவில்லை. நான் இந்தியாவினை விட்டு வெளியேறிவிட்டதாக, தகவல்கள் பரவி வருகின்றன. நான் இங்கேயே உள்ளேன். சத்ய லோகத்தில் இருந்து இயக்கப்படுகின்றேன். நான் தொடர்ந்து, என் பக்தர்களைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன். அவர்களுக்கு ஆசியை வழங்கியும் வருகின்றேன். ஆனால், ஊடகங்கள் ஏன் இப்படி பேசுகின்றன எனத் தெரியவில்லை.

மேலும், வருமான வரித் துறையும் நாங்கள் இந்தியாவினை விட்டு வெளியேற வில்லை என்றேக் கூறியுள்ளது. ஆனால், மீடியா தான் நாங்கள் இந்தியாவினை விட்டு வெளியேறிவிட்டோம் என்று கூறி வருகின்றது. எனக்குத் தெரியும், இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். அதுவே நம் பலம். இந்தப் பிரச்சனையின் காரணமாக, நாம் மிகவும் பலமடைகின்றோம்.

நாங்கள் உங்களின் உண்மையான நண்பன். உங்களுடையப் பிரச்சனைகளுக்கு நாங்கள் நல்லத் தீர்வு அளிக்கின்றோம். நாங்கள் உங்களுடன் தான் இருக்கின்றோம். தொடர்ந்து உங்களுக்கு உதவுவோம். ஒரு சிலர் நாங்கள் எல்லாவற்றையும், விட்டுவிட்டு சென்றுவிட்டோம் என்று. அப்படி இல்லை. நாங்கள் அப்படி செய்யவில்லை. நடக்கும் அனைத்தும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். எப்பொழுதும் போல், நடந்து கொண்டே இருக்கும். உங்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன். தொடர்ந்து, எனக்கு ஆதரவளிக்கும் என் பக்தர்களுக்கு என்னுடைய நன்றிகள். என்றும், என்னுடைய ஆசிகள் உங்களுக்கு என்றும் உண்டு எனவும் கூறியுள்ளார்.

HOT NEWS