தமிழகத்தில் தற்பொழுது 33 மாவட்டங்கள் உள்ளன. இந்நிலையில், இன்று 34வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உதயமாகின்றது. இன்று முதலமைச்சர் திரு.பழனிசாமி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் நிர்வாகப் பணிகளைத் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர்கள் மற்றும் பிற அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து, தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என, கள்ளக்குறிச்சி மக்கள் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, சென்ற ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சிப் பிரிக்கப்பட்டது. அது தற்பொழுது, இன்று முதல் மாவட்டமாக செயல்பட உள்ளது.