ஹிந்தி மொழியானது, டைப்பரில் உள்ள குழந்தை என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல்ஹாசன் பேசியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில், சுமார் 500 மாணவிகளுக்கு, மாதவிடாய் கால பெட்டிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு, பெட்டிகளை வழங்கிய கமல்ஹாசன், மேடையில் பேசும் பொழுது, ஹிந்தி மொழி ஒரு டைப்பரில் உள்ள குழந்தை.
தமிழ், சமஸ்க்ருதம், தெலுங்கு ஆகியவைகளுடன் ஒப்பிடும் பொழுது, இந்தி மொழி இன்னும் இளைய மொழி தான். அதனையும் கவனித்துக் கொள்ள வேண்டியது நம் கடமை. அதற்காக, அதனை திணிக்கக் கூடாது எனவும் கூறியுள்ளார்.