தன்னை போலீஸார் துன்புறுத்துகின்றனர்! கமல் அவசர வழக்கு!

18 March 2020 அரசியல்
kamalhaasanpolice.jpg

இந்தியன்2 படப்பிடிப்பின் பொழுது நடைபெற்ற விபத்து குறித்து விசாரிக்கும் போலீசார், தம்மை துன்புறுத்துவதாக வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்தியன் 2 படப்பிடிப்பு ஆரம்பித்ததில் இருந்து, கமல்ஹாசனுக்குத் தொல்லை தான் எனக் கூறலாம். அந்த அளவிற்கு மனிதர் பலப் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றார். காலில் ஆபரேஷன், சூட்டிங் தாமதம், தயாரிப்பாளருடன் பிரச்சனை உள்ளிட்டப் பல விவகாரங்கள் இருந்தாலும், அனைத்திற்கும் முத்தாய்ப்பாக அமைந்து விட்டது சூட்டிங் ஸ்பார்ட்டில் நடைபெற்ற விபத்து.

பிப்ரவரி மாதம் 19ம் தேதி அன்று நடைபெற்ற சூட்டிங் பொழுது, எதிர்பாராத விதமாக ராட்சத கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில், அங்கு இருந்து மூன்று பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க ஆரம்பித்தனர். இது குறித்து மத்தியக் குற்றப்பிரிவு போலீசார், உலகநாயகனுக்கு சம்மன் அனுப்பினர்.

இதனைத் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகிய கமல்ஹாசனிடம், மூன்று மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணையில் கமல்ஹாசனை, விபத்து எப்படி நடந்தது என நடித்துக் காட்டக் கூறியிருக்கின்றனர். இதனால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த கம்ஹாசன், தன்னைப் போலீசார் விசாரணை என்றப் பெயரில் துன்புறுத்துவதாக கூறியுள்ளார்.

அவருடைய வழக்கினை, அவசர வழக்காக ஏற்ற நீதிமன்றம், தேவைப்படும் பட்சத்தில், விசாரணை ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கமளித்தால் போதும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

HOT NEWS