கர்தார்பூர் நகருக்கான பாதையினை, இன்று பாரதப் பிரதமர் மோடி திறந்து வைக்கின்றார். குருநாநக் ஜெயந்தியினை கொண்டாடுவதற்கு இன்று, பஞ்சாப் செல்லும் மோடி, அங்கு கர்தார்பூர் நகருக்கான வழித்தடத்தினை திறந்து வைத்து வழிபாடு செய்கின்றார்.
மேலும், இதன் வழியாக சென்று, பாகிஸ்தானிற்குள் வரும் இந்திய பக்தர்களுக்கு 20 அமெரிக்க டாலர்களை வசூலிக்க உள்ளது பாகிஸ்தான். இதற்கான அறிவிப்பினை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.