எடியூரப்பாவிற்கு கொரோனா! ஊழியர்களுக்கும் கொரோனா!

03 August 2020 அரசியல்
yediyurappabs.jpg

கர்நாடாக முதல்வர் எடியூரப்பாவிற்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸானது, நாளுக்கு நாள் வேகமாகப் பரவி வருகின்றது. இந்த வைரஸிற்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் உள்ளிட்டோரும் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் அலுவலகத்தில் பணிபுரிந்த ஆறு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அவருடைய அலுவலகம் மூடப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. அங்கு பணிபுரிந்த அனைவரிடமும், கொரோனா தொற்று இருக்கின்றதா என்ற சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அம்மாநில முதல்வர் எடியூரப்பாவிற்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். அவருடன் தொடர்பில் இருந்தவர்களை பற்றி, சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்து அவர்களிடமும் சோதனை செய்து வருகின்றனர்.

HOT NEWS