காஷ்மீரில் திடீரென்று தீவிரவாதிகள் நடத்திய, பயங்கரவாதத் தாக்குதலால் பலர் படுகாயம் அடைந்தனர்.
காஷ்மீரில் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்தினை நீக்கிய நிலையில், அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகின்றது. இதனால், அப்பகுதியில் இந்திய இராணுவத்தினர் தொடர்ந்து, பாதுகாப்புப் பணியிலும், தீவிர ரோந்துப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் பகுதியில் உள்ள, துணை ஆணையரின் அலுவலகத்தை நோக்கி, தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினர். ஆனால், அந்த குண்டுகள் ரோட்டிலேயே விழுந்து வெடித்தன. இதனால், அங்கு இருந்த பாதுகாப்பு பணியாளர்கள், போக்குவரத்துக் காவலர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் உட்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதனால், அவர்கள் அவசர அவசரமாக, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். குண்டுகளை வீசிய நபர்கள், வேகமாகத் தப்பிச் சென்று விட்டனர். இதனால், காஷ்மீர் பகுதியில் பதற்றம் நிலவி வருகின்றது.