உலகளவில் ஒரு சிலர் மட்டுமே, தற்பொழுது சர்வாதிகாரிகளாக உள்ளனர். அவர்களில் மிகவும் முக்கியமானவர் கிம் ஜோங் உன்.
அவர் தொடர்ந்து, அமெரிக்காவிற்கு தலைவலியாக பார்க்கப்பட்டு வருகின்றார். இவர் வாரம் ஒரு முறை, அணு ஆயுத சோதனையை செய்து வருகின்றார் என்றால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு, ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 12ம் தேதி அன்று, கிம் ஜோங் உன்னிற்கு, இருதயத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்த அறுவை சிகிச்சையினைத் தொடர்ந்து, அவர் கோமாவில் இருப்பதாகவும், அவர் இறந்து விட்டார் எனவும் செய்திகள் வெளியாகின. இவைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, கடந்த மாதம் வடகொரியாவில் நடைபெற்ற உரத் தொழிற்சாலை திறப்பு விழாவில் அவர் கலந்து கொண்டார்.
இதனால், அவர் சாகவில்லை என்ற தகவல் உறுதியானது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், அதில் மீண்டும் சந்தேகம் கிளம்பியது. கிம் தன்னுடைய போலியினை, நடமாட விட்டுள்ளார் எனவும், அது கிம் இல்லை என்ற செய்திகள் உலா வந்து கொண்டு இருந்தன. தொடர்ந்து, வடகொரியாவின் மீடியாக்களும் எவ்விதப் பதிலும் அளிக்காமல் அமைதி காத்து வந்தனர்.
இந்த சூழ்நிலையில், தற்பொழுது மீண்டும் அணு ஆயுத சோதனையை கிம் பார்வையிட்டுள்ளார். இதனை வடகொரிய ஊடகங்கள் கூறியுள்ளன. அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை, வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பார்வையிட்டார் எனவும், அவர் அடுத்தத் திட்டம் குறித்து முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் எனவும் கூறப்படுகின்றது.