கிம் மிகவும் நன்றாக உள்ளார்! தென் கொரியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

27 April 2020 அரசியல்
kimjongunhorse.jpg

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் நலமாக உள்ளதாக, தென் கொரியா கூறியுள்ளது.

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னிற்கு, கடந்த ஏப்ரல் 12ம் தேதி அன்று இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதில், அவர் பலவீனம் அடைந்ததாகவும், மோசமான நிலையில் அவர் உள்ளதாகவும் செய்திகள் பரவின. இதனை அடுத்து, அவர் ஏப்ரல் 15ம் தேதி அன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வான, அவருடைய தாத்தாவின் நினைவு நாள் விழாவில் கூட கலந்து கொள்ளவில்லை.

இதனை வைத்து, அவர் மிகவும் பரிதாப நிலையில் உள்ளார் எனப் பலரும் பேச ஆரம்பித்து விட்டனர். அமெரிக்க செய்தி நிறுவனங்களான சிஎன்என் உள்ளிட்டவைகள் இதனை உறுதி செய்தன. இது குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கிம் எப்படி இருக்கின்றார் என்பதுப் பற்றித் தெரியாது. அவர் உடல்நலம் தேறி விரைவில் பணிக்கு வர வேண்டும் என்றுக் கூறினார்.

இதனிடையே, வடகொரியாவிற்கு தன்னுடைய மருத்துவக் குழுவினை அனுப்பியது சீனா. தற்பொழுது அவர் நலமாக உள்ளதாக தென் கொரிய அதிபர் கூறியுள்ளார். இதுகுறித்து, தென் கொரியாவின் முக்கிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர், தென் கொரிய அதிபர் மூன் ஜேவிற்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதில், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், வடகொரியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள வோன்சேன் நகரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருக்கின்றார் என தெரிவித்துள்ளார். இதனை தென் கொரிய அதிபரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

HOT NEWS