நேற்று சென்னை பெசன்ட் நகரில், திருத்தப்பட்ட தேசியக் குடியுரிமைப் போராட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அப்பகுதியில் இருந்த வீடுகளின் முன்பு, அப்பகுதி பெண்கள் தரையிலும், ரோட்டிலும் கோலங்கள் இட்டனர்.
இதனால், அவர்களைப் போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனுமதியின்றி, பொது இடங்களில் கோலம் போட்டதால் அவர்களைக் கைது செய்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. அந்த ஆறு பேரும் கவலரத்தைத் தூண்டும் விதத்தில் கோலம் இட்டு இருப்பதால், கைது செய்யப்பட்டு இருக்கலாம் என, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
இந்நிலையில், இதற்கு திமுக உட்பட பல கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களை, உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற குரலும் எழுப்பப்பட்டது. இன்று காலையில், திமுக தலைவர் முக ஸ்டாலினின் ஆழ்வார்பேட்டை வீட்டிலும் சிஏஏ என்ஆர்சி வேண்டாம் என்ற கோலம் இடப்பட்டு உள்ளது. அதே போல், மறைந்த திமுக தலைவர் மு கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டின் முன்பும் இந்தக் கோலம் இடப்பட்டு உள்ளது.