தஞ்சை ஆவுடையார் திருக்கோயிலில் வருகின்ற பிப்ரவரி 5ம் தேதி அன்று, திருக்குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கான வசதிகளை செய்யும் பணிகள், மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, தஞ்சை ஆவுடையார் கோயிலில் தமிழ் முறைப்படியே, பூஜைகள் மற்றும் குடமுழுக்கு நிகழ்ச்சியானது நடைபெற வேண்டும் என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என, இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டது.
இதற்கு பதிலளித்துள்ள இந்து சமய அறநிலையத் துறை, சமஸ்க்ருதம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும், குடமுழுக்கு நிகழ்ச்சியானது நடைபெறும் என்று கூறியுள்ளது. இதனை, பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.