திருச்சியில் உள்ள, லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடித்த வழக்கில் சிக்கியுள்ள முருகன், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் ஒவ்வொரு நடிகையின் பெயரினையும் கூறி வருவதாக, செய்திகள் வெளியாகி உள்ளன.
போலீசாரின் விசாரணையில் இருக்கும் முருகன் கூறுகையில், படம் எடுப்பதற்காக, நடிகைகளை அனுகியதாகவும், பின்னர் அவர்களுடன் பழகியதாகவும் தெரிகின்றது. மேலும், அவன், கொள்ளையடித்த நகைகளில் சிலவற்றை, அந்த நடிகைகளுக்கு பரிசாக வழங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், காவல் துறையில் உள்ள அதிகாரிகளுக்கு, கார் உட்பட, பல விதங்களில் கவனித்ததாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், முருகனின் மற்றொரு கூட்டாளியான சுரேஷிடம் விசாரித்த போலீஸ், அவனை திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்று, அங்கு அவன் பதுக்கி வைத்துள்ள நகைகளை மீட்கும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.