நித்தியானந்தா விஷயத்தில் திடீர் திருப்பம்! மாயமான பெண் தந்தை மீது புகார்!

29 November 2019 அரசியல்
nithyanandavideo.jpg

தான் பிடதி ஆசிரமத்தில் இல்லாத சமயம் பார்த்து என் மீது, பொய்யான தகவல்களும் புகார்களும் வழங்கப்படுவதாகவும் அதனைப் பற்றி தன்னுடைய சீடர்கள் வருத்தம் கொள்ளத் தேவையில்லை என, நித்தியானந்தா தெரிவித்தார்.

மேலும், அவர் பேசுகையில் தன்னையும், தன்னுடைய சீடர்களையும் புண்படுத்துபவர்களை கால பைரவர் பார்த்துக் கொள்வார் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், என்னுடையக் குழந்தைகளைக் காணவில்லை என குஜாரத்தினைச் சேர்ந்தப் பெற்றோர் புகார் கூறியிருந்தனர். அதனை முன்னிட்டு, அக்குழந்தைகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், காணாமல் போன அந்தப் பெண்கள், தற்பொழுது தங்களுடைய வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

அதில், எங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை எனவும், எங்களுடையக் குருவினை எங்கள் தந்தை அவமதிக்கின்றார் எனவும், பொய்யானத் தகவல்களைப் பரப்புகின்றார் எனவும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளனர். எங்களுடையக் கல்வியில் இருந்து, எங்கள் குடும்பத்தின் பொருளாதாரப் பிரச்சனைகள் வரை, எல்லாவற்றையுமே நித்தியானந்தாதான் பார்த்துக் கொள்கின்றார். என் தந்தை, பணக் கையாடல் பிரச்சனையில் சிக்கியுள்ளார் எனவும், அவரையும் எங்கள் குருவே காப்பாற்றினார் எனவும் கூறியுள்ளார் அந்த பெண்.

HOT NEWS