சீனாவில் உள்ள வங்கிகளில் சுமார் 715 கோடி ரூபாய் அளவிற்கு, கடன் வாங்கியதாக லண்டனில் உள்ள நீதிமன்றத்தில், அனில் அம்பானியின் மீது வழக்குத் தொடரப்பட்டது.
அனில் அம்பானி, தங்களிடம் வாங்கியப் பணத்தினைத் திருப்பித் தரவில்லை எனவும், அதனை மீட்டுத் தர வலியுறுத்தியும் சீனாவின் வங்கிகள் வழக்குத் தொடர்ந்தன. இதனையடுத்து, அனில் அம்பானி ஆஜராக, நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால், நீதிமன்றத்தில் அனில் அம்பானியின் வழக்கறிஞர் ஆஜரானார். அவர் பேசுகையில், தற்பொழுது இந்திய மதிப்பின் படி, என்னுடைய மதிப்பு பூஜ்ஜியம் ஆகும். ஒரு காலத்தில் அவர் பணக்காரராக இருந்தவர் எனவும், தற்பொழுது அப்படி இல்லை எனவும் வாதிட்டார். இருப்பினும், இவருடையப் பேச்சினை ஏற்க மறுத்த நீதிமன்றம், சீன வங்கிகளிடம் வாங்கியப் பணத்தினை திருப்பித் தர கூறியுள்ளது.