கர்நாடகாவில் ஆட்சி செய்து வந்த குமாரசாமியின் ஆட்சி கவிழ்ந்து, தற்பொழுது எடியூரப்பாவின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், தான் அரசியலில் இருக்க விரும்பவில்லை என குமாராசாமி தெரிவித்துள்ளார்.
அவர் இன்று நடந்தக் கூட்டத்தில் பேசும் பொழுது, நான் ஒரு பொழுதும் என் மக்களைக் கைவிட்டதில்லை. அவர்களுக்காகவே நான் உழைத்து வருகின்றேன். எனக்கு அரசியலில் விருப்பமில்லை. எனக்கு முதலமைச்சர் உள்ளிட்ட எவ்விதப் பதவியும் தேவையில்லை. எனக்கு உங்களுடைய அன்பு மட்டுமேப் போதும்.
எனக்கு இன்னும் ஏன், என் மகன் தோற்றான் எனத் தெரியவில்லை. என் மக்கள் தான், அவனை தேர்தலில் போட்டியிட வேண்டுகோள் விடுத்தனர். அவனும், அதன் காரணமாகவே போட்டியிட்டான். ஆனால், அவன் மண்டியா பகுதியில் போட்டியிட்டதை நான் விரும்பவில்லை. ஆனால், மண்டியா பகுதியில் உள்ள என் சொந்த மக்களே, அவனை தேர்தலில் போட்டியிட வேண்டும் எனக் கூறினார்கள்.
அவர்களின் பேச்சிற்கு மதிப்பளித்தே, என் மகள் அங்குப் போட்டியிட்டான். ஆனால், அவனுக்கு அவர்கள் ஆதரவளிக்காமல் தோற்கடித்து இருப்பது எனக்கு மிகுந்த வருத்தத்தினை அளிக்கின்றது என மேடையிலேயே அழுதுவிட்டார். பின்னர், கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பேசிய குமாரசாமி, தொடர்ந்து மக்களின் அன்பு எனக்கு என்றும் தேவை எனக் கூறினார்.