ஆபாச இணையதளங்களைத் தடுப்பது குறித்து நடவடிக்கை! மாபா பாண்டியராஜன் பேட்டி!

09 December 2019 அரசியல்
mafoipandiarajan.jpg

ஆபாசப் படங்களை வெளியிடும் வலைதளங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த பொழுது பேசிய அவர், குழந்தை ஆபாசத் திரைப்படங்களைத் தடுப்பது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்படும். தற்பொழுது மிகப் பெரிய ஜெனரேஷன் கேப் உள்ளது. தற்பொழுதுள்ள டிஜிட்டல் உலகில், எவ்வாறு இவைகளைக் கையாள்வது என்பது குறித்து யோசிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் விஷயங்கள், ஆபாசப் படங்கள் பற்றி நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் எனவும், இது பற்றி தமிழக முதல்வரிடம் பேசுவோம் எனவும் அவர் தெரிவித்தார். சென்ற வாரம், குழந்தைகள் ஆபாசப் படம் பார்ப்பவர்கள் மற்றும் பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றப்பிரிவு டிஜிபி ரவி ஐபிஎஸ் பேட்டியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS