புதிதாக வந்துள்ளது மஹா புயல்! தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

31 October 2019 அரசியல்
mahacyclone.jpg

கியார் புயலைத் தொடர்ந்து, தற்பொழுது மஹா என்னும் புயல் அரபிக் கடலில் மையம் கொண்டுள்ளது.

தற்பொழுது, கியார் புயலின் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் லேசான மழை முதல், கன மழை பெய்து வருகின்றது. பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மழை பெய்து வருவதால், மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த கியார் புயலின் காரணமாக, தமிழகத்தின் பல அணைகளில் நீர் நிரம்பி வருகின்றது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயாராக எடுக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், திருவனந்தபுரத்திற்கு அருகே, அரபிக் கடலில் மஹா என்ற புதிய புயல் உருவாகி உள்ளது. தற்பொழுது, கியார் புயல் மற்றும் மஹா புயல் காரணமாக மேலும், மழையின் அளவுத் தீவிரமடையும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

HOT NEWS