மலேசிய அதிபர் ராஜினாமா! அரசியல் துரோகம் எனக் குற்றச்சாட்டு!

25 February 2020 அரசியல்
mahadirmohamed.jpg

மலேசியாவின் அதிபராக இருந்த மஹதீர், தன்னுடையப் பதவியினை ராஜினாமா செய்தார்.

பெர்சாத்து கட்சியினைச் சேர்ந்த, 94 வயதுடைய மஹதீர் மொஹம்மது தன்னுடைய ராஜினாமா கடிதத்தினை, அந்நாட்டு மன்னரிடம் முறைப்படி அளித்தார். இதனால், அந்நாட்டில் அடுத்தப் பிரதமர் யார் எனவும், தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தனக்கு கொடுக்கப்பட்டு வந்த ஆதரவினை ஒரு சிலர் விலக்கியதாலும், இதனால் எதிர்கட்சிகளின் உதவியினை மஹதீர் மொஹம்மது நாடியதாகவும் கூறப்படுகின்றது. இதனால், மஹதீர் கட்சியின் இரண்டாவது பெரிய தலைவரும், வருங்கால பிரதமராக பதவியேற்க வேண்டியவருமான அன்வர் இப்ராஹீம் கவலை அடைந்துள்ளார்.

HOT NEWS