நல்லவர்கள், சமூக அமைதி ஏற்பட முயற்சிக்க வேண்டும்! மய்யம் வேண்டுகோள்!

26 August 2019 அரசியல்
maiamelection1.jpg

வேதாரண்யத்தில் இரண்டு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது, அண்ணல் அம்பேத்கரின் சிலை உடைக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

அங்கு, இதுவரை 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர், கைது செய்துள்ளனர். இதற்கு பலரும் தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இதற்கு மக்கள் நீதி மய்யமும், தன்னுடைய எதிர்ப்பினை தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சி, அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, வேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்கரின் சிலை உடைக்கப்பட்டது. இது ஆதிக்க வெறியின் கோர தாண்டவன் தான். ஒடுக்கப்பட்ட சமூகமும் முன்னேற வேண்டிய சமூகமும் மோதிக் கொள்வது, அரசியலை தொழிலாய் செய்பவர்களுக்கு தீனியே தவிர, தமிழின முன்னேற்றத்திற்கு வழியல்ல. சமூக விரோதிகள் மீது அரசின் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட வேண்டும். நல்லவர்கள் சமூக அமைதி ஏற்பட முயற்சிக்க வேண்டும் என, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கையொப்பத்துடன் வெளியாகி உள்ளது.

HOT NEWS