பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் முயன்ற உதவிகளை, மக்கள் நீதி மய்யம் கட்சியினர் வாடிக்கையாக வைத்துள்ளனர். அது போன்ற, ஒரு நெகிழ்ச்சிகரமான சம்பவம் நடைபெற்று உள்ளது.
நாகை மாவட்டம் சிக்கல் ஊராட்சியில் வசித்து வந்தவரின் வீட்டில், திடீரென்று ஏற்பட்ட மின்கசிவு காரணமாக, வீட்டின் கூரைப் பகுதியானது எரிந்து சாம்பலானது. இதனால், அந்த வீட்டினைச் சேர்ந்தவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனை அறிந்த மக்கள் நீதி மய்யம் கட்சியினைச் சேர்ந்த செய்யது அனல் உள்ளிட்டோர், தங்கள் கட்சியின் சார்பில் சுமார், 10,000 ரூபாய் மதிப்புடைய பொருட்களை வழங்கினர்.
இந்த நிகழ்சியில், அந்தக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதற்கு அப்பகுதி மக்கள் பெருத்த வரவேற்பினை அளித்துள்ளனர்.