சத்தம் இல்லாமல் சேவை செய்யும் மக்கள் நீதி மய்யம்! குவியும் பாராட்டுக்கள்!

04 August 2019 அரசியல்
maiamlatest1.jpg

ஏரியைத் தூர்வாறுதல், கருவேல மரங்களை வெட்டுதல், குடிநீர் பந்தல் அமைத்தல் என, மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தங்களால் முடிந்த உதவிகளை, பொதுமக்களுக்குச் செய்து வருகின்றனர்.

பல இடங்களில், மக்கள் சேவை மையம் அமைத்து, மக்களின் குறைகளை கேட்டு, அதற்கு எந்த அதிகாரிகளை சந்திக்க வேண்டுமோ அவர்களை சந்தித்து, உதவிகளையும் பெற்றுத் தருகின்றனர். நேற்று, மறவக்காடு பகுதியில் உள்ள குளத்தை தூர்வாரினர். மேலும், நேற்று காவிரியில் குளிக்க வரும் பொதுமக்களுக்கு, குடிப்பதற்கு நீர் மோரினை வழங்கினர்.

தொடர்ந்து, பல இடங்களில் உள்ளப் பிரச்சனைகளை தங்கள் கட்சியின் விசில் ஆப் மூலம் தெரிவித்து, பொதுமக்கள் பிரச்சனைக்கான தீர்வினை பெற்றுவருகின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சியினர், தானாக முன் சென்று பிரச்சனைகளுக்கான தீர்வினை, தமிழக அதிகாரிகளிடம் புகாராகவும் கொடுத்து தீர்வு கண்டு வருவதினை, கமல்ஹாசனின் ரசிகர்களும், தொண்டர்களும் மகிழ்ச்சியுடன் சமூக வலைதளங்களில், பகிர்ந்து வருகின்றர்.

HOT NEWS