கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே, பலத் திட்டப்பணிகளை தன்னுடைய ரசிகர் மன்றத்தின் மூலம் செய்து வந்தார் உலகநாயகன் கமல்ஹாசன்.
இந்நிலையில், அவர் அரசியலுக்கு வந்து மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியையும் ஆரம்பித்து விட்டார். நாடாளுமன்றத்தேர்தலில் கணிசமான வாக்குகளையும் பெற்றுவிட்டார். தற்பொழுது, அக்கட்சியினர் மக்களின் குறைத் தீர்ப்புக் கூட்டங்கள், பிரச்சனைகள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். தொடர்ந்து, மக்கள் பிரச்சனைகளை தீர்க்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அவைகளில் ஒரு கட்டமாக, கடந்த ஞாயிற்றுக் கிழமை (24-11-2019) அன்று, அருப்புக் கோட்டைப் பகுதியில், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் எஸ்பீஎம் டிரஸ்ட்டுடன் இணைந்து, இலவச மருத்துவ முகாம் நடத்தியது மக்கள் நீதி மய்யம். அதில், பலரும் ஆர்வமாகக் கலந்து கொண்டு, தங்களுடைய உடலினை இலவசமாகப் பரிசோதனை செய்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியினை, மக்கள் நீதி மய்யத்தின் அருப்புக் கோட்டை மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையேற்று நடத்தினர். உடன் கட்சி நிர்வாகிகளும் செயலாற்றி உள்ளனர். எது எப்படியோ, பொது மக்களுக்கு நல்லது நடந்தா அது சரிதானே!