தேர்தலில் போட்டியிடவில்லை! மக்கள் நீதி மய்யம் அதிரடி!

22 September 2019 அரசியல்
maiamlogo.jpg

தற்பொழுது நடைபெற உள்ள, தமிழக இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடப்போவதில்லை என, கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பழைய கொள்ளையர் கட்சிகளையும், அதன் கூட்டுப் பங்காளிகளையும், பெருவாரி மக்களின் எண்ணப்படி ஆட்சியிலிருந்து அகற்றி, 2021ல் ஆட்சிப் பொறுப்பினை மக்களின் பேராதரவுடன் கைப்பற்றி, மக்களாட்சிக்கு வழி வகுக்கும் முனைப்போடு, மக்கள் நீதி மய்யம் கட்சி விரைவாக முன்னேறி வருகிறது.

நாங்குநேரியிலும், விக்கிரவாண்டியிலும் தங்கள் தலைவர்களையும் அவர்களின் தலைப்பாகைகளையுமாவது தக்க வைத்துக் கொள்ளலாம் என்கின்ற எண்ணத்துடன், ஆட்சியிலிருந்தவர்களும் ஆள்பவர்களும் போடும் இடைத்தேர்தல், எனும் இந்த ஊழல் நாடகத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கெடுக்காது என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில், அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதனால், நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடப்போவதில்லை என்பது தெளிவாகிறது.

HOT NEWS