இரயில் தடம் புரண்டது! பொதுமக்கள் தப்பித்தனர்!

27 December 2019 அரசியல்
traintrack.jpg

மைசூர் டூ பெங்களூரூக்கு தினமும், ரயில்கள் சேவையானது வழங்கப்பட்டு வருகின்றது. இவைகளில், மால்குடி பகுதிக்கு செல்லும் எக்ஸ்பிரஸூம் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று காலையில் கிளம்பிய இந்த எக்ஸ்பிரஸ் இரயிலானது, நாயண்டாஹள்ளி என்றப் பகுதியில் வந்து கொண்டிருந்த பொழுது, என்ஜினானது எதிர்பாராத விதமாக தடம் புரண்டது.

வண்டியின் என்ஜினே தடம் புரண்டதால், அதனுடனை தொடர்பில் இருந்த பெட்டிகளும் தடம் புரண்டன. இருப்பினும், நிலைமை சாதூர்யமாகக் கையாண்ட ஓட்டுநர், பெரிய அசம்பாவிதம் ஏற்படாமல் விபத்தினைத் தவிர்த்தார்.

இந்த விஷயத்தினை அறிந்த இரயில்வே ஊழியர்கள், பிரச்சனையை வேகமாக கையாண்டு, இரண்டு மணி நேரத்திற்குள் சரி செய்தனர். பின்னர், மீண்டும் இந்த இரயில் மால்குடி சென்றடைந்தது.

HOT NEWS