நாளை (08-01-2020) சிஏஏ மற்றும் என்ஆர்சி சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் முழுஅடைப்புப் போராட்டம் நடக்க உள்ளது. இதற்கு, தன்னுடைய ஆதரவு கிடையாது என, மம்மதா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சிஏஏ மற்றும் என்ஆர்சி உள்ளிட்டவைகளை ஏற்றுக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை. மக்களை கஷ்டப்படுத்தும் இந்த சட்டத்தினை மேற்கு வங்கத்தில் அமல்படுத்தப் போவதில்லை. மேலும், இந்த முழு அடைப்புக்கு ஆதரவும் இல்லை.
இந்த முழு அடைப்பால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். எனவே, மக்களை பாதிக்கும் எவ்வித போராட்டத்தினையும் நான் ஆதரிப்பதில்லை. இந்த முழு அடைப்பிற்கு என்னுடைய ஆதரவு கிடையாது எனக் கூறிவிட்டார்.