பாஜக ராஜ்ஜியம் சுருங்கி வருகின்றது! மம்மதா பேனர்ஜி சுளீர்! கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து!

12 February 2020 அரசியல்
mamatabanerjee1.jpg

டெல்லியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியானது, அதிகப்படியான இடங்களில் வென்று ஆட்சி அமைக்க உள்ளது. இதற்கு, பல தலைவர்களும் தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்மதா பேனர்ஜியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். பாஜகவின் பண பலம் மற்றும் நிர்வாக ஒத்துழைப்புகள் தோல்வியடைந்துள்ளன. அவர்கள் முற்றிலும், தோல்வியினைத் தழுவியுள்ளனர். கர்நாடகா மற்றும் உத்திரப்பிரதேசத்தினைத் தவிர்த்து, மற்றப் பிற மாநிலங்களில் அவர்கள் ஆட்சியென்பது முழுமையாகக் கிடையாது எனக் கூறியுள்ளார்.

வருகின்ற 2021ம் ஆண்டு, மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக, தற்பொழுது முழுவீச்சில் மம்மதா தயார் ஆகி வருகின்றார். அவர் கூறுகையில், பாஜகவின் ஆட்சி மிகவும் சுருங்கி வருகின்றது. இது மக்களின் மனநிலையினைக் காட்டுகின்றது. இது அனைத்து மாநிலங்களிலும் எதிரொலிக்கின்றது. அவர்கள் கொண்டு வந்த சிஏஏ சட்டத்தினை, மேற்கு வங்கத்தில் அனுமதிக்கமாட்டேன் எனவும் கூறியுள்ளார்.

HOT NEWS