டீக் கடையில் டீ ஆத்திய மம்மதா!

22 August 2019 அரசியல்
mamatabanerjeetea.jpg

பிரதமர் நரேந்திர மோடி டீக்கடையில் வேலை செய்து பின், படிப்படியாக இந்தியாவின் பிரதமராக மாறியுள்ளார். இந்நிலையில், தற்பொழுது மேற்கு வங்க முதல்வர் செல்வி. மம்தா பேனர்ஜியும், டீக்கடைக்குள் புகுந்துள்ளார்.

அம்மாநிலத்தில் உள்ள கிராமப் பகுதிகளுக்கு சென்று, குறைகளைக் கேட்டு வரும், மம்தா, நேற்றுத் திடீரென்று அவ்வாறு சென்ற திகா மாவட்டத்தில் உள்ள துதாப்பூரில், உள்ள ஒரு டீக்கடைக்குள் நுழைந்து விட்டார். கடைக்காரர் சற்று நேரத்தில் திணறி விட்டார். பின்னர், அங்கு சூழ்ந்த மக்களுக்கு, தன் கையினாலேயே டீ போட்டுக் கொடுத்து உற்சாகப்படுத்தினார்.

இது குறித்து, டிவிட்டரில், பதிவிட்டுள்ள செல்வி. மம்தா சில சமயம், சிறிய கேளிகளும், நம்மை மகிழ்ச்சிப்படுத்தும் என பதிவிட்டுள்ளார். தற்பொழுது அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ டிவிட், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

HOT NEWS