கொல்கத்தா முழுவதும் பேரணி! குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மமதா!

16 December 2019 அரசியல்
mamatabanerjee.jpg

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்கத்தில் மாபெரும் பேரணி நடத்தப்படும் என, அம்மாநில முதல்வர் மம்மதா பேனர்ஜி கூறியுள்ளார்.

அவர் பேசுகையில், இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவானது, நாட்டினை பிளவுப்படுத்தும் விதத்தில் உள்ளதாகவும், அதனை ஒரு போதும் ஆதரிக்கப் போவதில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், மேற்கு வங்கத்தில் இந்த சட்டத்தினை அமல்படுத்தப் போவதில்லை எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்தக் குடியுரிமை மசோதாவினைக் கண்டித்து, கொல்கத்தாவில் பிரம்மாண்டப் பேரணி நடத்தப்பட உள்ளதாகவும், அதற்காக திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தயாராக வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

HOT NEWS